சூலுார்:சூலுார் அடுத்த இருகூர் பேரூராட்சியில், அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண்கள் பாசறை புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.எம்.எல்.ஏ., கந்தசாமி பேசுகையில், ''அ.தி.மு.க., ஆட்சியில் மட்டுமே, பல நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தி.மு.க.,வினர் கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களிடம் மனுக்களை வாங்கினர். அவற்றை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, மக்களை ஏமாற்றி, கிராம சபை கூட்டங்களை நடத்துகின்றனர். மக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும். பாசறையினர், தி.மு.க.,வின் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும்,'' என்றார்.இருகூர் நகர செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் குமாரவேல், கந்தவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE