சூலுார்:முற்றுகை போராட்டத்துக்கு செல்ல முயன்ற, விவசாய சங்க மாநில தலைவரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர், சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதையடுத்து, அந்த அமைப்பின் மாநில தலைவர் சண்முகம் உட்பட, 10 பேரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று கைது செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். சிறிது நேரம் கழித்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE