கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று, கொரோனா குணமான, 103 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவையில் நேற்று, 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 52 ஆயிரத்து, 074 ஆக உயர்ந்தது. நேற்று கொரோனா தொற்றுக்கு, ஒரு மூதாட்டி உயிரிழந்தார். பலியானவர்களின் எண்ணிக்கை, 646 ஆக உயர்ந்தது. அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த, 103 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் இதுவரை, 50 ஆயிரத்து, 581 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 847 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE