புதுடில்லி: பிரிட்டன் விமானங்களுக்கான தடை மேலும் நீட்டிக்கப்படலாம் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் உருமாறிய வைரஸ் பரவலை தொடர்ந்து, பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு விமானங்கள் இயக்குவதற்கும், இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கும் விமானங்கள் இயக்க டிச.,31 வரை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி கூறியதாவது: பிரிட்டனுக்கான விமான போக்குவரத்திற்கான தடை டிச.,31 க்கு பிறகும் நீட்டிக்கப்படலாம். இந்த தடை தற்காலிகமானது தான். இது நீண்ட காலத்திற்கோ அல்லது காலவரையின்றியோ நீடிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE