பதவியிலிருந்து துாக்குங்கள்!
'லட்டு போன்ற வாய்ப்பு கிடைத்தும், இப்படி பறிகொடுத்து நிற்கின்றனரே...' என, கேரள மாநில காங்., தலைவர் ராமச்சந்திரன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரை வறுத்தெடுக்கின்றனர், காங்., மேலிடத் தலைவர்கள். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், மொத்தம் உள்ள, 20 தொகுதிகளில், 19ல் வெற்றி பெற்று, காங்., தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதனால், அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர், காங்., தலைவர்கள்.இதற்கு முன்னோட்டமாக, சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஆனால், ஆளும் கூட்டணியான இடது ஜனநாயக முன்னணி, அபார வெற்றி பெற்றது; இது, காங்., மேலிடத் தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'தங்கக் கடத்தல் வழக்கில், முதல்வர் மீதே குற்றச்சாட்டு உள்ளது. ஆட்சிக்கு எதிரான அதிருப்தி மக்களிடம் உள்ளது. இதுபோன்ற நேரத்திலேயே வெற்றி பெற முடியாவிட்டால், உங்களுக்கு எதற்கு பதவி' என, ராமச்சந்திரனையும், ரமேஷ் சென்னிதலாவையும் காய்ச்சி எடுக்கின்றனர், மேலிடத் தலைவர்கள்.
'இரண்டு பேரையும் பதவியிலிருந்து நீக்கி விட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்' என, சமயம் பார்த்து குரல் எழுப்புகின்றனர், கட்சியில் உள்ள,
அவர்களது அதிருப்தியாளர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE