கள்ளக்குறிச்சி : ரேஷன் கார்டை (பி.எச்.எச்.,) (முன்னுரிமை குடும்ப அட்டை பட்டி யல்) வகையாக மாற்றி தரக்கோரி இறைஞ்சி கிராம பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு விபரம்:மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள், இறைஞ்சி கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகிறோம். கூலி வேலை செய்து வரும் நிலையில், ரேஷன் கடைகளில் அரசு வழங்கும் உணவு பொருட்களை நம்பியுள்ளோம். பி.எச்.எச்., அட்டை வகையை பெற தகுதி வாய்ந்த பயனாளிகளாவர். இந்நிலையில், எங்களது ரேஷன் கார்டு என்.பி.எச்.எச்., ஆக உள்ளது. அதனை பி.எச்.எச்., அட்டை வகையாக மாற்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE