கடலுார் : கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது.
நேரு யுவ கேந்திரா, நாணமேடு நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில்நடந்த முகாமிற்கு மாவட்ட இளைஞர் அலுவலர் ரிஜேஷ்குமார் தலைமை தாங்கினார். மன்றத் தலைவர் கனகராஜ் வரவேற்றார்.மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் ெஹன்றி லாரன்ஸ், மாவட்ட என்.எஸ்.எஸ்., திட்ட தொடர்பு அலுவலர் திருமுகம் முகாமை துவக்கி வைத்தனர்.நாணமேடு ஊராட்சி துணைத் தலைவர் கணேசன் வாழ்த்திப் பேசினார்.
ரத்த வங்கி மருத்துவர் வளர்மதி, ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். சண்முகம், தீபங்கர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திரா பல்நோக்கு அலுவலர் ராமமூர்த்தி செய்திருந்தார். ஒருங்கிணைப்பாளர் ஜீவா நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE