அவலுார்பேட்டை : வளத்தி அருகே சாலை மறியல் செய்த தி.மு.க., ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 82 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
வளத்தியை அடுத்த நெகனுார் கிராமத்தில் நேற்று முன்தினம் தி.மு.க., சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலைக்கு சென்ற பெண்களும் கலந்து கொண்டனர்.அப்போது ஒன்றிய பணி மேற்பார்வையாளர் வேலை உறுதி திட்டத்தில் பணிக்கு வருகை தந்தவர்களை குறித்து தணிக்கை செய்துள்ளார். பணிக்கு வராமல் மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஆப்சென்ட் போட்டுள்ளார்.பணிக்கு வரவில்லை என்ற பதிவை கண்டித்து தி.மு.க., வினர் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புகாரின் பேரில் வல்லம் தி.மு.க., ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா, 80 பெண்கள் உள்ளிட்ட 82 பேர் மீது வளத்தி இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE