கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் பெண்ணிடம் தகராறு செய்து தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கொடியரசு மனைவி மணிமேகலை,32; சின்னசேலத்தில் எலக்ட்ரீசியன் கடையில் வேலை செய்யும் இவர், நேற்று முன்தினம் பணிமுடிந்து மாலை 6.40 மணியளவில் வீட்டிற்கு சென்றுள்ளார். கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து நடந்து சென்றபோது மதுபோதையில் சூளாங்குறிச்சி காலனியை சேர்ந்த மணிவேல் மகன் தங்க பாண்டியன்,32; தகரை சேர்ந்த பாஸ்கர் மகன் விக்னேஷ்,28; ஆகியோர் மணிமேகலை மீது மோதியுள்ளனர்.
இது குறித்து கேட்ட மணிமேகலை, அவரது கணவரை, இருவரும் சேர்ந்து திட்டி தாக்கியுள்ளனர்.புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் தங்கபாண்டியன், விக்னேஷ் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE