விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 14,970 ஆக உயர்ந்துள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 14,962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 110 பேர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 92 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று, 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு 14,970 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, நோயில் இருந்து குணமடைந்த 14,768 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE