கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே அல்சர் பிரச்னையால் அவதியடைந்த சிறுவன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.க
ள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் ஸ்ரீகாந்த்,17; இவர், கடந்த சில மாதங்களாக அல்சர் பிரச்சனையால் அவதியடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27 ம் தேதி மாலை 3:00 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் துாக்குமாட்டிக் கொண்டு தொங்கியுள்ளார்.உடன் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், அவர் இறந்தது தெரியவந்தது.புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE