விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நடந்த கவன ஈர்ப்பு ஆலோசனை கூட்டத்தில், வரும் 8ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில், துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள், துாய்மை காவலர்கள் ஆகியோர் கவன ஈர்ப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் செல்வராசு தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ராமர் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் வரவேற்றார். ஒன்றிய சேர்மன் செல்லதுரை பேசினார். கூட்டத்தில், சிறப்பு காலமுறை ஊதியம் அறிவித்தும் வழங்கவில்லை. வாரிசு அடிப்படையில் பணி நியமனம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய தலைவர் சேகர் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE