சென்னை : 'புத்தாண்டில், நாட்டு மக்களுக்கு, இரண்டு மடங்கு ஆசீர்வாதம் கிடைக்கும்' என, பால் தினகரன் வாழ்த்து தெரிவித்தார்.
'இயேசு அழைக்கிறார்' நிறுவனரும், காருண்யா நிகர்நிலை பல்கலை வேந்தரும், 'சீஷா' சமுதாய தொண்டு நிறுவனருமான பால் தினகரன், வெளியிட்ட புத்தாண்டு செய்தி குறிப்பு: கடந்த ஆண்டு, நாம் கடந்து வந்த கண்ணீரின் பாதை, சர்வதேச நோய் பரவல் நிமித்தம் வந்த இழப்புகள் எல்லாம் முற்றுப்பெற்று, மீண்டும், இரண்டு மடங்கு பலனை அனுபவிக்கும் ஆண்டாக, 2021 விளங்கும்படி வாழ்த்துகிறேன்.அத்துடன், யாவரும் சமாதானத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து, செய்வது எல்லாவற்றிலும், வெற்றி காணும்படி, எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.இவ்வாறு, அவர் வாழ்த்து தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE