சென்னை:கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்புடன், நெய் வழங்குவதற்காக, ஆவின் நிர்வாகம், 12.69 லட்சம் நெய் பாட்டில்களை தயாரித்து வருகிறது.
தமிழக அரசின் உத்தரவுப்படி, தமிழக கட்டுமான பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு, 2021ம் ஆண்டிற்கான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது.இத்துடன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் வேண்டுகோளை ஏற்று, ஆவின் நிர்வாகம், 100 மி.லி., அளவு கொண்ட நெய் பாட்டில்கள் வழங்க உள்ளது.
இதன்படி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மதுரை, சேலம், திருச்சி, விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களில், 100 மி.லி., கொண்ட, 12 லட்சத்து, 69 ஆயிரத்து, 550 நெய் பாட்டில்கள் தயாரிக்கும் பணி, போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.
இவை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, நாளைக்குள் அனுப்பி வைக்கப்படும். நெய் பாட்டில் மீது, 'இது விற்பனைக்கு அல்ல' என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டிருக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE