தாம்பரம் : சென்னை அடுத்த மாடம்பாக்கம், ராஜம்மாள் நகரைச் சேர்ந்தவர் ஆஷா, 51.ஆஷா மற்றும் அவரது தோழியர் மூவர், கடந்த, 18ம் தேதி, வெளியே செல்ல, தனித்தனியாக இருசக்கர வாகனங்களில் புறப்பட்டு, ராஜகீழ்ப்பாக்கம் சிக்னல் வந்தனர்.
சிக்னலை கடந்து, சிறிது துாரம் சென்றபோது, ஆஷா எதிர்பாராதவிதமாக, விபத்தில் சிக்கினார். இதில், கீழே விழுந்த ஆஷாவுக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சைக்கு பின், அதே பகுதியில் உள்ள, தனியார் மருத்துவமனையில், மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அங்கு, மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவை சரிசெய்ய, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமானதால், 22ம் தேதி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்; அங்கு, நேற்று காலை, 8:30 மணியளவில் பலியானார்.இது குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE