மானாமதுரை : மானாமதுரை வாரச்சந்தையில் நடைபெறும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி அனைத்து வியாபாரிகளுக்கும் கடைகளை ஒதுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மானாமதுரையில் வியாழக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.வாரச்சந்தையில் இருந்த கட்டடங்கள் சேதமடைந்ததாலும்,போதுமான கடைகள் இல்லாததாலும் அவற்றை விரிவாக்கம் செய்ய ரூ.2.50 கோடி ஒதுக்கப்பட்டு தற்போது கட்டுமான பணி நடக்கிறது.
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்து கடைகள் அமைக்க வரும் அனைத்து வியாபாரிகளுக்கும் கடைகளை ஒதுக்க வசதியாக 300 க்கும் மேற்பட்ட கடைகளை கட்ட உத்தரவிட்டார், அங்கு கழிப்பிடம்,குடிநீர்,லைட் வசதிகள் செய்யவும் கேட்டுக்கொண்டார். உதவி இயக்குனர் மாடசாமி சுந்தர்ராஜ்,செயல் அலுவலர் ஜெயராஜ்,சுகாதார ஆய்வாளர் தங்கதுரை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE