கோவை:ரூட்ஸ் நிறுவன பெட்ரோல் பங்க்கில், இரண்டு லட்சம் ரூபாய் கையாடல் செய்தவரை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் செயல்படும், ரூட்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தவர் இளையராஜா. வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிய பணம் ரூ.2.12 லட்சத்தை, மேலாளரிடம் ஒப்படைக்காமல் மாயமானார். அவரை பிடித்து கேட்ட போது, பணத்தை திருப்பி தருவதாக கூறி, மீண்டும் பணியில் சேர்ந்தார். ஆனால், வேலைக்கு வராமல் தலைமறைவானார். சாய்பாபா காலனி போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இளையராஜா மீது, மோசடி வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE