திருப்பூர்:திருப்பூரில் மொபைல் போன் திருட்டில் ஈடுபட்டு வந்த, நான்கு பேரை போலீசார் கைது செய்து, ஆறு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் தர்மேந்திரகுமார், 24. திருப்பூர், தாராபுரம் ரோடு, புதுார் பிரிவில் தங்கி பனியன் நிறுவனத்துக்கு சென்று வருகிறார். இவர் நேற்று முன்தினம் புதுார் பிரிவில் பெட்டி கடையில் மொபைல் போனை வைத்து, நின்று கொண்டிருந்தார்.அங்கு வந்த, இருவர் மொபைல் போனை எடுத்து கொண்டு தப்பியோடினர். மக்கள் உதவியோடு வாலிபர்களை பிடித்து தெற்கு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், திருப்பூர், பெரிய தோட்டத்தை சேர்ந்த அபுதாகிர், 20, உடுமலையை சேர்ந்த சல்மான், 20 என்பது தெரிந்தது.ஏற்கனவே மொபைல் போன் திருட்டு வழக்கில் தொடர்புடையது தெரிந்தது. இருவரை கைது செய்து, ஐந்து மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். மற்றொரு வழக்கில், பெரிய தோட்டத்தை சேர்ந்த முகமது ஆதாம், 20, தேனியை சேர்ந்த அஜய்குமார், 20 ஆகியோரை கைது செய்து, ஒரு போனை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE