திருப்பூர்:விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால், தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூரில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் அவசர கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு, மாநில செயல் தலைவர் வெற்றி தலைமை வகித்து பேசியதாவது:வேளாண் சட்டம் மற்றும் 2020 மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறவும், டில்லியில் நடைபெறும் விவசாய போராட்டத்தை ஆதரித்தும் கவர்னர் மாளிகை நோக்கி செல்லும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.இதனால், நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டிக்கிறோம். டில்லியில் நடைபெறும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இல்லாவிடில், தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு, அவர் பேசினார்.மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராஜூ, துணை தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் தங்கவேலு, அமைப்பாளர் மயில்சாமி, ஏர்முனை இளைஞர் அணி மாநில துணை தலைவர் சுரேஷ் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE