குன்னுார்:நீலகிரி மலை ரயில், ஒன்பது மாதங்களுக்குப் பின், நாளை முதல் இயக்கப்படுகிறது.
நுாற்றாண்டு பழமை வாய்ந்த, நீலகிரி மலை ரயில், குன்னுார் - மேட்டுப்பாளையம் இடையே, நீராவி இன்ஜின்; குன்னுார் - ஊட்டி இடையே டீசல் இன்ஜினால் இயக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து, மலை ரயில் இயக்கம், மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நாளை முதல் மலை ரயிலை இயக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி குகநேசன் கூறுகையில், ''ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையே, முழு முன்பதிவுடன் கூடிய மலை ரயில், 31ம் தேதியில் இருந்து இயக்கப்படுகிறது.''பழைய முறைப்படி, மேட்டுப்பாளையம் - ஊட்டிக்கு தலா ஒரு முறை; குன்னுார் - ஊட்டி இடையே, தலா மூன்று முறை இயக்கப்படும். அனைத்து பயணியரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம். ரயிலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE