மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம் வாகமண்ணில் தனியார் தங்கும் விடுதியில் டிச.20 இரவில் மயக்க மருந்து பயன்பாட்டுடன் ஆபாச நடனம் நடந்தது தொடர்பாக மலையாள 'டிவி' நடிகை பிரிஸ்டி விஸ்வந்த் 23, உட்பட கைதான 9 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கிறார்கள்.
விருந்தில் 25 பெண்கள் உட்பட 59 பேர் பங்கேற்றனர். 9 பேர் கைது செய்யப்பட்டு பீர்மேடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள 50 பேரில் மேலும் சிலரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில் கைதானவர்களிடம் விசாரிக்க பீர்மேடு முன்சீப் நீதிமன்றத்தில் டிச., 23ல் போலீசார் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றத்தின் அனுமதியை தொடர்ந்து நடிகை உட்பட ஒன்பது பேரையும் டிச.28 முதல் ஜன.,9 வரை காவலில் எடுத்து போலீசார் விசாரணையை துவக்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE