மதுரை:சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் நேற்று கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கமானது.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் நேற்று 17 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 10,563 ஆக உயர்ந்தது. நேற்று 16 பேர் உட்பட மொத்தம் 10,907 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது 147 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தேனி
தேனி மாவட்டத்தில் நேற்று 9 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை 16,599 பேர் குணம் அடைந்து உள்ளனர். புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 16,880 ஆக உயர்ந்தது. நேற்று உயிரிழப்பு இல்லை. மொத்த பலி 322.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் புதிதாக 3 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 6315 பேருக்கு கொரோனா ஏற்பட்டதில் 6156 பேர் குணம் அடைந்து உள்ளனர். 27 பேர் சிகிச்சையில் உள்ளனர். 132 பேர் பலியாகியுள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 4 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். புதிதாக 8 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 6523 பேர் பாதிக்கப்பட்டதில் 6333 பேர் குணமாகியுள்ளனர். தற்போது 60 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 126 பேர் பலியாகியுள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 19 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். 7 பேருக்கு கொரோனா உறுதியானது. இதுவரை பாதிப்புக்குள்ளான 16,311 பேரில் 15,016 பேர் குணமடைந்துள்ளனர். 75 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலியில் நேற்று 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 14933 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 18 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 15262 ஆனது. தற்போது 118 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 211 பேர் இறந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE