திருப்புத்துார் : ஆ.தெக்கூர் சிங்கை சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மனிதவளம் குறித்த கலந்துரையாடல் நடந்தது.
கல்லுாரி தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். தாளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் ஹேமமாலினி துவக்கவுரையாற்றினார். மனித வளத்துறையில் பணியாற்றும் விஜயலெட்சுமி, பிந்திநாயர்,ஸ்வர்ணலதா, கோபாலன் பங்கேற்றனர். கணினி மென்பொருள் துறைக்கு தேவையான மென்பொருள், எதிர்காலம், எதிர்கொள்ளும் முறைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினர். பேராசிரியை நுாரியாபேகம் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE