பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு, கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு, ஆச்சிபட்டியில் கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியில், 10 அணிகள் பங்கேற்றன.இறுதி போட்டியில், சின்னாம்பாளையம் அணியும், பொள்ளாச்சி கல்லுக்குழி தோனி அணியும் மோதின. இதில், பொள்ளாச்சி கல்லுக்குழி தோனி அணி வெற்றி பெற்றது.பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இளங்கோ தலைமை வகித்தார். தொழிலாளர் அணி செயலாளர் ரகுநந்தன் முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் மாணிக்கம், வெற்றி பெற்ற அணிக்கு, முதல் பரிசாக, கோப்பையுடன் நான்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கினார். இரண்டாம் பரிசாக, சின்னாம்பாளையம் அணிக்கு, கோப்பையும், இரண்டாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE