புதுடில்லி:டில்லியில் போலி நிறுவனங்கள் வாயிலாக ரூ300 கோடி ரூபாய்க்கும் மேல் 'ஹவாலா' மோசடி நடந்திருப்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர்.டில்லியில்
போலி நிறுவனங்கள் வாயிலாக கொள்முதல் மற்றும் விற்பனை ஆவணங்கள் தயாரித்து பலரும் 'ஹவாலா' மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதன் வாயிலாக போலி நிறுவனங்களிடம் இருந்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி பரிவர்த்தனை
ஆவணங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.அவர்களிடம் இருந்து கணக்கில் வராத 14 கோடி ரூபாய் மற்றும் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.இந்த போலி நிறுவனங்களின் மோசடி நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை தொடர்வதாக வருமானவரி அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE