வரும், 31ம் தேதி, கட்சி அறிவிப்பை நடிகர் ரஜினி வெளியிடப் போவதாக கூறிய நிலையில் திடீரென முடிவை மாற்றி கட்சி துவங்க போவதில்லை என அறிவித்தார்.
* 1995: முத்து படத்தில், 'நான் எப்ப வருவேன்; எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்தில் வருவேன்' என, பஞ்ச் டயலாக் பேசி, முதன்முதலாக தன் அரசியல் ஆசையை வெளிப்படுத்தினார் ரஜினி.
* 2017 மே: சென்னையில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.
* டிச., 31: அரசியலுக்கு வருவது உறுதி. ஆன்மிக அரசியலை முன்னெடுப்போம். தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டி என அறிவிப்பு.
* 2019: லோக்சபா தேர்தலின் போது, 'சொன்னதை செய்வேன். எங்களின் இலக்கு சட்டசபை தேர்தல் தான்' என்றார்.
* 2020 மார்ச், 5: மாவட்ட செயலர்களுடன் நடத்திய கூட்டத்துக்கு பின் பேசிய இவர், 'என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன்' என்றார்.
* மார்ச், 12: 'கட்சிக்கு ஒரு தலைமை; ஆட்சிக்கு ஒரு தலைமை' என்ற முடிவில் இருப்பதாக தெரிவித்தார்.
* அக்., 29: தன் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு பதிலளித்த ரஜினி, அது, என்னுடைய அறிக்கை அல்ல; ஆனால், அதிலுள்ள தகவல் உண்மை என்றார்.
* நவ., 30: மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை.
* டிச., 3: ஜனவரியில் கட்சி துவங்குவதாகவும், டிச., 31ல் தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
* டிச., 29: உடல்நிலை காரணமாக கட்சி தொடங்க முடியாது என ரஜினி அறிவிப்பு.