வால்பாறை:வால்பாறையில், பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில், வால்பாறை லோயர்பாரளை எஸ்டேட் பகுதிக்குள் நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு யானைகள் முகாமிட்டன.அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர், சத்துணவு கூடத்தையும் இடித்து, உள்ளே இருந்த அரிசி, பருப்பு, முட்டை போன்ற பொருட்களை வெளியே இழுத்து சேதப்படுத்தின. பள்ளியின் முன் நிறுத்தப்பட்ட லாரி, கார் போன்றவற்றின் கண்ணாடிகளை யானைகள் உடைத்து சேதப்படுத்தின.வனச்சரக அலுவலர் ஜெயசந்திரன் தலைமையில், வனவர் முனியாண்டி மற்றும் மனித -- வன விலங்கு மோதல் தடுப்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று, ஒரு மணி நேரம் போராடி யானைகளை விரட்டினர். ஒரே நேரத்தில் பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டு, வீடு மற்றும் கடைகளை இடித்து சேதப்படுத்தி வருவதை தடுக்க முடியாமல் வனத்துறையும், இரவில் துாக்கம் இழந்து தொழிலாளர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE