கோவை:ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் மறியலில் ஈடுபட்ட அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மலைக்கோட்டையில், காடேஸ்வரா சுப்ரமணியம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவை மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், கோனியம்மன் கோவில் முன் மறியல் போராட்டம் நடந்தது. தடையை மீறி மறியலில் ஈடுபட்ட, 300 பேரை போலீசார் கைது செய்தனர். மறியல் போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தசரதன் தலைமை வகித்தார்.
ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில், கோட்ட செயலாளர் மஞ்சுநாத் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE