திருப்பூர்:திண்டுக்கல்லில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூரில் மறியலில் ஈடுபட்ட, 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல், மலைக்கோட்டையில் பவுர்ணமி கிரிவலம் செல்வது தொடர்பாக போலீசார் தடை உத்தரவு பிறப்பித்தனர். நேற்று மாலை ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில், தடையை மீறி பக்தர்கள் கிரிவலம் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.இதை கண்டித்தும், கோவில்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதை கண்டித்தும், திருப்பூரில் நேற்று ஹிந்து முன்னணியினர் மறியலில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி அலுவலகம் சந்திப்பு பகுதியில் மாநில பொது செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் திரண்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதேபோல், அவிநாசி ரோடு புஷ்பா சந்திப்பு பகுதியிலும் மறியல் நடந்தது. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE