கோவை:கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.
கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி மறுப்பதை கண்டித்து, நேற்று தி.மு.க.,வினர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அண்ணாதுரை சிலை சந்திப்பில் இருந்து கோவை கமிஷனர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்த தி.மு.க.,வினரை, செஞ்சிலுவை சங்கம் முன் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாருக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பழனிசாமி, எம்.எல்.ஏ., கார்த்திக் மற்றும், 90 பெண்கள் உட்பட, 430 பேரை போலீசார் கைது செய்தனர்.போராட்டம் காரணமாக, அவிநாசி ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, செஞ்சிலுவை சங்கம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE