பழநி : பழநியில் நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் முதல் கோட்ட மாநாடு கோட்ட தலைவர் நந்தகோபால் தலைமையில் நடந்தது.
இதையொட்டி கொடியேற்றத்துடன் துவங்கிய ஊர்வலம், மாநாடு நடைபெறும் மண்டபத்தில் முடிந்தது.கோட்ட இணைச் செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். வரவு செலவு வாசித்தனர்.நெடுஞ்சாலை துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை மாற்ற வேண்டும்.சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறை படுத்த வேண்டும்.
கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கு ஊதிய நிர்ணயம் ஒருநபர் குழு அறிக்கைப்படி அரசாணையாக வழங்க வேண்டும் என்பது உட்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில செயலாளர் ராஜமாணிக்கம், கோட்டச் செயலாளர் மணிமாறன், பொருளாளர் கந்தசாமி, அரசு ஊழியர் சங்க தலைவர் வேலுசசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE