ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் சாலையோர வியாபாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.டி.எஸ்.பி., அசோகன் தலைமை வகித்தார்.
இன்ஸ்பெக்டர் சீனிவாசகன், போக்குவரத்து எஸ்.ஐ., நல்லசாமி முன்னிலை வகித்தனர்.பல்வேறு பகுதியில் இருந்து பாதயாத்திரையாக பழநி செல்வோர், ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரே வழித்தடத்தில்தான் செல்வர். இதனால் இங்கு நெரிசல் அதிகம் இருக்கும். பக்தர்கள் பாதையை வழிமறித்து கடைகள் போடக் கூடாது. அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் சாலையோர கடைகளை அமைக்க வேண்டும்.ரோட்டிற்கும், கயிறு கட்டியுள்ள இடத்திற்கும் நடுவே கடைகள் வைக்கக்கூடாது என, ஆலோசனைகள் வழங்கப்பட்டது. எஸ்.ஐ.,க்கள் சூர்யகலா, கணேசன், சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE