வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு ஒன்றியம் கோணியம் பட்டியில் தி.மு.க., சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் கனிகுமார் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் பேசியதாவது:
விருவீடு பகுதியில் அதிக அளவில் முருங்கை சாகுபடி செய்யப்படுவதால் இந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்கப்படும். 58 கிராம கால்வாய் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும், என்றார். ஒன்றியக்குழுத் தலைவர் பரமேஸ்வரி, கவுன்சிலர்கள் சக்திவேல் விஜயகர், பெனினாதேவி, அவைத் தலைவர் செல்வராஜ் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE