வடமதுரை : வேடசந்துார் தனியார் மில்லில் பணி முடித்த தொழிலாளர்கள் தனியார் வேனில் வையம்பட்டி பகுதி நோக்கி சென்றனர். அணைக்கரைப்பட்டி டிரைவர் ஜீவா 25 வேனை ஓட்டினார்.திண்டுக்கல்லில் இருந்து திருச்சி சென்ற சரக்கு வேனுடன் போட்டியிட்டு வேன் சென்றுள்ளது. தங்கம்மாபட்டி சோதனைச்சாவடியில் வேக தடுப்புகளை கண்டு திடுக்கிட்டு இடது பக்கமாக திருப்பியதால் ரோட்டோரம் வேன் கவிழ்ந்தது. இதில் பெரியகுளத்துபட்டி ராஜேஸ்வரி 38, வையம்பட்டி அஞ்சம்மாள் 38, மல்லிகா 30, தேக்கமலை கோவில்பட்டி பாரதி 18, ஒத்தப்பட்டி பிரியா 25, உள்பட 23 பேர் காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE