திண்டுக்கல் : பிரிட்டனிலிருந்து திண்டுக்கல் வந்த 11 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கபடுகின்றனர்.
பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் கொரோனா புது வடிவம் பெற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோரை தீவிரமாக கண்காணிக்கின்றனர்.தமிழகத்திலும் தீவிர விசாரணை, கண்காணிப்பு பணிகள் நடக்கிறது. திண்டுக்கல்மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இது வரை புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் மதுரை, திருச்சி, கோவை விமானங்கள் மூலமாக திண்டுக்கல் எவரேனும் வந்துள்ளனரா என்று பட்டியல் தயாரிக்கப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பிரிட்டனிலிருந்து வருவோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை கவனிக்க திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களில் பிரிட்டனில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு 14 பேர் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதில் ஒருவர் சென்னையிலும், இன்னொருவர் நாகப்பட்டினத்திலும், ஒருவர் திரும்பவும் பிரிட்டனுக்கே சென்று விட்டதாக கூறுகின்றனர்.மீதமுள்ள 11 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒருவருக்கு கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை.இருப்பினும் அனைவரும் அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE