மதுரை : மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில் மன்னர் பாஸ்கர சேதுபதியின் 117ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழ்ச் சங்க செயலாளர் மாரியப்பமுரளி முன்னிலையில் நடந்தது.
கல்லுாரி தலைவர் தசரதராமன், ஆட்சிக் குழு உறுப்பினர் சத்தியநாராயணன், செந்தமிழ் இதழ் பதிப்பாசிரியர் சதாசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேதுபதி நினைவு தின கபடி போட்டியில் முதலிடம் பெற்ற அமெரிக்கன் கல்லுாரி மாணவர்களுக்கு சுழற்கோப்பை ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. அருளானந்தர் கல்லுாரி மாணவர்கள் 2ம் இடமும், செந்தாமரை கல்லுாரி மாணவர்கள் 3ம் இடமும் பெற்றனர்.முதல்வர் வேணுகா வரவேற்றார். தமிழாசிரியர் ஆறுமுகப்பெருமாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங் கினார். முன்னாள் மாணவர் சங்க செயலாளர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE