புதுச்சேரி : கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளை முன்னிட்டு லாஸ்பேட்டை கலாம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் 'பிளாஸ்டிக் இல்லா பகுதி', 'துாய்மை இந்தியா' என்ற தலைப்புகளில் கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடந்தது.இதில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா லாஸ்பேட்டை அரசு குடியிருப்பு சிறுவர் பூங்காவில் நடந்தது.விழாவிற்கு கலாம் ரோட்டரி குழும தலைவர் முருகவேல் தலைமை தாங்கினார். சேர்மன் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். திட்ட இயக்குனர் சந்திரசேகரன் வரவேற்றார்.
எலைட்ஸ் ரோட்டரி சங்க தலைவர் குணசேகரன் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர் களுக்கு பரிசு வழங்கினார்.முன்னாள் தலைவர்கள் கலியபெருமாள், ராமமூர்த்தி, அரிமா சங்க முன்னாள் தலைவர் நாகப்பன், ஓவியமணி, முனுசாமி வாழ்த்தி பேசினர். பொருளாளர் வீரவேல் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE