ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு, அமைச்சர் பெஞ்சமின் வர தாமதமானதால், மாணவர்கள் பசியோடு காத்திருந்தனர்.
ஸ்ரீபெரும்புதுார் கல்வி மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், தண்டலம், மாத்துார், பண்ரூட்டி, மொளச்சூர், மதுரமங்கலம் உள்ளிட்ட ஏழு அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ளன.இவற்றில் பயிலும், 930 மாணவர்களுக்கு, தமிழக அரசின், விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்வின் துவக்க விழா, ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில், நேற்று நடந்தது.காலை, 11.00 மணிக்கு, விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஸ்ரீபெரும்புதுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சரியான நேரத்திற்கு வந்தனர். மாணவர்கள், காலை, 10.00 மணிக்கே, பள்ளிக்கு வந்து காந்திருந்தனர்.ஆனால், சிறப்பு அழைப்பாளரான, ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், மதியம், 2.00 மணிக்கு வந்தார். பின், சிறப்புரையாற்றி, விழா முடிய, 2.40 மணி ஆகிவிட்டது.அதுவரை, மாணவர்கள், மதிய உணவு சாப்பிடாமல் பசியோடு இருந்தனர். இதை பார்த்து, பெற்றோர் மன வேதனை அடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE