பேசின்பாலம் : பேசின்பாலம் அருகே, தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில், ஆறு பேர் சரண் அடைந்தனர்.
கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் நகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 35; தனியார் நிறுவன ஊழியர்.இவரை, நேற்று முன்தினம் மதியம், 1:20 மணி அளவில், பேசின்பாலம், குமாரசாமி ராஜாபுரத்தில், மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்து தப்பியது. இது குறித்து, பேசின்பாலம் போலீசார் விசாரித்தனர்.இதில், கொருக்குபேட்டை, ஐந்தாவது தெருவைச் சேர்ந்த விஜயன் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளிக்கும், நான்காவது தெருவைச் சேர்ந்த அன்பரசன் என்பவருக்கும், அந்த பகுதியில், 'யார் பெரியவன்' என்ற போட்டி காரணமாக, அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜயன் உடல் நலமின்றி இறந்த பின், நவம்பரில் அவரது மகன் பாலசுப்ர மணியம், 30, என்பவரை அன்பரசன் மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட, ஏழு பேர் சேர்ந்து வெட்டிக்கொன்றனர்.இந்த வழக்கில், ஆர்.கே.நகர் போலீசார், அவர்களை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.இதனால், பாலசுப்ரமணியத்தின் கொலைக்கு பழிவாங்கும் முடிவில், அவரது குடும்பத்தினர், சிறையில் இருக்கும் அன்பரசனின் அண்ணன் சிலம்பரசனை, கொலை செய்தது தெரிய வந்தது
.இதையடுத்து, கொலையாளிகளை பேசின்பாலம் போலீசார் தேடி வந்த நிலையில், பாலசுப்ரமணியத்தின் உறவினர்களான, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த அசோக் குமார், 24, உட்பட, ஆறு பேர் சரணடைந்தனர்.தலைமறைவாக உள்ள இருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE