கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி வளர்ச்சித் திட்டம் குறித்து, திட்டக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
கடம்பத்துார் ஒன்றியத்தில், சுகாதாரம், வருவாய், கால்நடை, பள்ளி கல்வி, சத்துணவு, நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை என, 21 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் திட்டக் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த திட்டக் குழு உறுப்பினர்களுக்கு, கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில், வரும் ஆண்டுகளில், ஊராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பயிற்சி முகாம் நேற்று நடந்தது.இதில், ஊரக வளர்ச்சி நிறுவன பயிற்றுனர்கள் கலைச்செல்வி, பவித்ரா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில், ஊராட்சி பகுதிகளில் மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினர்.நேற்று நடந்த பயிற்சியில், கூவம், கொண்டஞ்சேரி, குமாரசேரி, நுங்கம்பாக்கம், பாப்பரம்பாக்கம், கொப்பூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள், வி.ஏ.,ஓ.,க்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பள்ளி தலைமையாசிரியர் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE