வெள்ளவேடு : வெள்ளவேடு அருகே, தனியார் மெரைன் கல்லுாரி மாணவர் கொலை வழக்கில், ஐந்து மாணவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமீன் கொரட்டூரில் உள்ள தனியார் மெரைன் இன்ஜினியரிங் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.இந்த கல்லுாரியின் விடுதியில், 172 வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், தங்கி பயின்று வருகின்றனர். கடந்த, 24ம் தேதி, நள்ளிரவு நடந்த கிறிஸ்துமஸ் விழா கொண்டாடத்தில் மாணவர்களிடையே இடையே தகராறு ஏற்பட்டது. அதில், பீஹார் மாநிலம், பாட்னா பகுதியை சேர்ந்த, 3ம் ஆண்டு மாணவர் ஆதித்யா ஷர்மா, 20, என்ற மாணவர், குத்தி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்தது தெரிந்தது.இதையடுத்து, வெள்ளவேடு போலீசார், மூன்றாமாண்டு படித்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தன் ஜோஸ்வா, 21, கெவின் ஜித்தன் மோகன், 21, ராகுல், 21, பிபின்பாபு, 20 மற்றும் ஹர்ஷத், 20, ஆகிய ஐந்து மாணவர்களையும் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE