புதுடில்லி: பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கொரோனா, இந்தியாவில் மேலும் 14 பேருக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை 20 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரிட்டனில் உருமாறிய கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து அந்நாட்டுடனான, விமான போக்குவரத்தை நிறுத்தியதுடன், பிரிட்டனில் இருந்து வந்தவர்களை கண்காணிக்க உத்தரவிட்டது. கடந்த 25ம் தேதி முதல் டிச., 23 வரை பிரிட்டனில் இருந்து திரும்பிய 33 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 114 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்களில் 6 பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று (டிச.,29) பரிசோதிக்கப்பட்ட 107 மாதிரிகளில் மேலும் 14 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதியாகியுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரிட்டனில் இருந்து திரும்பியவர்களில் இதுவரை 20 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கோல்கட்டா, புனே, டில்லி, புவனேஸ்வர், பெங்களூரு, ஐதராபாத்தில் உள்ளிட்ட 10 ஆய்வகங்களில் நடந்த பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE