கோபி: கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 15.62 லட்சம் ரூபாய்க்கு, நாட்டு சர்க்கரை நேற்று விற்பனையானது. ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நாட்டு சர்க்கரை ஏலம் நடந்தது. 60 கிலோ எடையில், 956 மூட்டைகள் வரத்தானது. முதல் தரம் (திடம்), குறைந்தபட்சம் மற்றும் சராசரியாக தலா, 2,480 ரூபாய், அதிகபட்சமாக, 2,500 ரூபாய்க்கு விலைபோனது. பஞ்சாமிர்தம் தயாரிக்க, பழநி தேவஸ்தான நிர்வாகம் சார்பில், 15.62 லட்சம் ரூபாய் மதிப்பில், 630 மூட்டைகளை கொள்முதல் செய்தனர். கட்டுப்படியாகாத விலையால், எஞ்சிய மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்ய முன்வரவில்லை என, விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE