ஈரோடு: திண்டுக்கல், பத்மகிரீஸ்வரர் கோவிலில், கிரிவலம் செல்வது தொடர்பான பிரச்னையில், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து, நேற்று இரவு வீரப்பன்சத்திரம் பகுதியில், ஐந்து நிமிடம், சத்தி சாலையில் ஹிந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநகர செயலாளர் சங்கர், முரளி ஆகியோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட, 25 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE