பவானி: சித்தோடு அருகே, மாமரத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 59; இவர், பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில், செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடித்துவிட்டு இரவு, 9:00 மணியளவில் டி.வி.எஸ்., எக்ஸல் மொபட்டில், சித்தோட்டில் உள்ள கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சாலையை கடந்தார். அப்போது, அந்த வழியாக ஜர்த்தல் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவர், ஓட்டி வந்த மஹேந்திரா வேன், மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார். சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE