வாழப்பாடி: வாழப்பாடியை சேர்ந்த எம்கோ, பேளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிகிறார். இவரது மனைவி புஷ்பா, வாழப்பாடி, அண்ணா நகர் காலனி, அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர்களது இளைய மகள் லோகானந்தஸ்ரீ, 9, தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் நடத்தும் இலக்கிய அமைப்பான, 'கானல்' என்ற இணைய வழியில் நடத்திய, சிறார் கதைசொல்லும் போட்டியில் பங்கேற்ற லோகானந்தஸ்ரீ, பன்னாட்டு அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். மிக நேர்த்தியாக கதை சொல்லும் இவரது காணொலி காட்சி, சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE