அரூர்: அரூரில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர், 80 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அரூர், ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், நேற்று முன்தினம் காலை,எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர், வெள்ளை அறிக்கை கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், உரிய அனுமதியின்றி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட, ஓய்வுபெற்ற ஆசிரியர் வேலு, 75, அருள், 45, கோவிந்தன் உள்ளிட்ட, 80 பேர் மீது, அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE