தர்மபுரி: ஏரியூர் அருகே இலவச வீட்டுமனை பட்டா நிலத்திற்கான நிலத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி, கிராம மக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே, சுஞ்சல்நத்தம் பஞ்., பட்டக்காரன்கொட்டாயில், 70 குடும்பத்தினர் வசிக்கிறோம். கூலித்தொழிலாளிகளான எங்களுக்கு, அதே பகுதியில், அரசு சார்பில், 2013ல் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், நிலத்தை அளந்து கொடுக்காமல் வருவாய்த்துறையினர் தொடர்ந்து, காலம் தாழ்த்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் பலன் இல்லை. எனவே, எங்களுக்கு வழங்கிய பட்டாவுக்கான இடத்தை அளந்து கொடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE