பென்னாகரம்: பென்னாகரம் அருகே உள்ள, பி.அக்ரஹாரம் முனியப்பன் சுவாமி கோவிலின் திருவிழா, நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே, பிளியனூர் அக்ரஹாரத்தில், முனியப்பன் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி, மாவட்டத்திலுள்ள, பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். ஆண்டுதோறும் மார்கழி இரண்டாவது செவ்வாய்க்கிழமையில், இக்கோவில் திருவிழா நடக்கும். கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிக்கனம்பட்டி, புதூர், அரிச்சந்திரனூர், அக்ரஹாரம், கெட்டூர், நல்லாம்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், முனியப்ப சுவாமிக்கு விரதமிருந்து, மாலை அணிந்தும் வந்து வழிபட்டனர். பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக, ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு வழிபட்டனர். கொரோனா காரணமாக, வழக்கத்தை விட பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. அங்கு அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. திருவிழாவையொட்டி, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவிழா ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE