ஏற்காடு: ஏற்காட்டில் பொது இடங்கள், தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், அதன் சுற்றுவட்டார மக்கள், சுற்றுலா பயணியர், ஆண்டுதோறும், ஏற்காட்டில் பொது இடங்கள், தங்கும் விடுதிகளில் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வர். நடப்பாண்டு கொரோனாவால், அங்கு பொது இடங்களில், தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடவும், விடுதியில் தங்கியுள்ளோர், இரவு, 9:00 மணிக்கு மேல் பொது இடங்களில் கூடவும், ஏற்காடு போலீசார் தடை விதித்துள்ளனர். மீறினால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, துண்டு பிரசுரம் மூலம், தங்கும் விடுதி, மக்களுக்கு எச்சரித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE